chinnatha sweetaa - சின்னதா

Sep
2012
08

posted by Tamilnambi on ,

6 comments


மணி மூன தாண்டி முப்பது நிமிஷம் ஆச்சு. நான் இங்க வந்து நின்னப்போ கம்பீரமா மேல வானத்த பாத்து கை காட்டிட்டு இருந்த மணிகூண்டு கடிகாரத்தோட மணி முள்ளும் கூட போக போக டயர்ட் ஆகி இப்போ பூமிய பாத்து இறங்கி வந்துட்டிருக்கு. "ஆனா நீ மட்டும் டயர்ட் ஆகி கிளம்பிராதடா !" ன்னு மனசுக்குள்ள ஒரு குரல் ! அதே சமயம் " ஏன்டா ! பண்றதுக்கு எத்தனையோ வேல இருக்கும் போது இதெல்லாம் ஒரு பொழப்பா ! த்தூ !" அப்படின்னு இன்னொரு குரல் ! ரெண்டும் என் மனசாட்சிதான். ஒரு மணில இருந்து என்ன பண்றதுன்னு தெரியாம, சாலமன் பாப்பையா மாதிரி ரெண்டு குரல்ல எது சொல்றதுல ஞயாயம் இருக்குனு கண்டுபிடிக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். ரெண்டரை மணி நேரம் கழிச்சும் ஒரு முடிவுக்கு வர முடியல. "நீ சொல்றதும் சரிதான் ! நீ சொல்றதும் சரிதான்!" ன்னு சொன்னா ரெண்டுமே காரி துப்பும் ! அதன் பேசாம போற வரைக்கும் போகட்டும்னு சும்மா உக்காந்திருந்தேன்.


"மச்சி ! வாழ்க்கைனா இதெல்லாம் வேணும்டா ! இதெல்லாம் இல்லாத வாழ்க்கை உப்பு சப்பில்லாத சாப்பாடு மாதிரி !"

"ஆமா ! இவரு பெரிய வாழ்க்க வாழ்ந்துட்டாறு ! இப்ப புத்திமதி சொல்ல வந்திருக்காரு! முதல்ல லைப்ல செட்டில் ஆகுற வழிய பாருடா !"

"மச்சி ! பெரியவங்க என்ன சொல்லி இருக்காங்க ? நன்றே செய் ! அதையும் இன்றே செய்ன்னு சொல்லியிருக்காங்க ! அப்புறம் ஏன் கவலை படுற ?"

"டேய் ! அது உன் ஆறாங் கிளாஸ் கணக்கு டீச்சர் ஹோம் வொர்க் பத்தி சொன்னதுடா ! அத ஏன் இங்க இழுக்கற ?!!"

" எதுக்கு சொன்னதா இருந்த என்ன ? இதுக்கு சூட் ஆகுதுல்ல ! அதுதான் முக்கியம் ! மச்சி ! இதுவும் நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி தான்டா ! எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது ! ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வரும் !"

"இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் ஊர்ல பாதி பேரு பைத்தியமா அலையுரானுங்க ! "

இது இப்போதைக்கு முடியாது. இது அடுத்த ஸ்டேஜுக்கு போறதுக்குள்ள இந்த காண்வெர்சேசன ம்யூட்  பண்ணிட்டு பிரச்சன என்னனு சொல்லிடறேன்.

 அவளும் நான் இருக்கற அதே  ஏரியா தான். நான் காலேஜுக்கு போக சீக்கிரம் எந்திரிக்கிறேனோ இல்லையோ, காலைல அவ காலேஜுக்கு போகும் போது பாக்கனும்னே அவசரம் அவசரமா எந்திருச்சு கெளம்புவேன். அவள காலைல பாத்துட்டா அன்னைக்கு எல்லாமே நல்லபடியா நடக்கும்னு நம்பிக்கை. அதுவும் அவ லைட்டா பாத்து சிரிச்சுட்டா அவ்வளோதான்! தண்ணி லாரியே எதிர்ல வந்தாலும் பிரேக் இல்லாம பைக் ஓட்டலாம் ! அந்த அளவுக்கு சூப்பரான நாளா அது இருக்கும் ! ஆனா இது எந்த அளவுக்கு உண்மைன்னு நான் இது வரைக்கும் டெஸ்ட் பன்னுனதில்ல. அப்படி டெஸ்ட் பண்ற ஐடியாவும் இல்ல. இதனால எனக்கு அவ மேல இருக்கறது காதலான்னு கேட்டா அதுக்கு பதில், தெரியாது ! கண்டிப்பா உலகத்துல இவ சிறந்த அழகி கெடையாது ! ஆனா இவள பாக்கும்போது மட்டும் ஏன் இதெல்லாம் தோனுதுன்னும் எனக்கு தெரியாது ! அவள பாக்கறப்ப எல்லாம் மனசு " அவள் அப்படி ஒன்றும் அழகில்லை !" ன்னு பாட்டு பாட ஆரம்பிச்சுரும் ! (ஆனா அவ கண்டிப்பா இந்த பாட்டுல வர்ற அஞ்சலிய விட அழகு!)

இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா "ஹாய்!" "ஹலோ" ல இருந்து "காலைல என்ன சாப்டிங்க?" "சட்னி தொட்டுக்க மறந்திராதிங்க!"ன்னு டெவலப் ஆயிட்டு இருந்துச்சு. இப்படிதான் ரெண்டு நாளைக்கு முன்னாடி அவ காலேஜ் போற பஸ் அன்னைக்கு லேட் ஆகி, தயக்கமா என்கிட்டே வந்து "எனக்கு காலைல பிராக்டிகல் எக்ஸாம் இருக்கு ! பஸ் இன்னும் வரல ! கொஞ்சம் காலேஜ் வரைக்கும் ட்ராப் பண்ண முடியுமா?"ன்னு கேட்டா. நான் சரின்னு உடனே சொல்லாம, லூசு மாதிரி 'குணா' லட்டு வாங்கற கமல் மாதிரி  ஒரு எபக்ட் கொடுத்து " ஆ ! வெல்(well) !" ன்னு ஆரம்பிக்கறதுக்குள்ள பாழா போன பஸ் வந்திருச்சு. அவளும் சிரிச்சி கிட்டே " நோ தேங்க்ஸ்!" ன்னு சொல்லிட்டு போய்டா !

(குரல் 1 - "ச்சு ச்சு ச்சு"

குரல் 2 - " டேய் ! அடங்குடா ! ")

அதான் இன்னைக்கு அவள டைரக்டா பாத்து 'அன்னைக்கு அதன பேரு அங்க இருக்கும் போது ஏன் என்கிட்டே மட்டும் அப்படி கேட்ட?' ன்னு மடக்கி ஒரு முடிவுக்கு வந்துராலாம்னு இப்படி அவ காலேஜ் முன்னாடி பைக்ல உக்காந்திருக்கேன். துரதிஷ்ட வசமா இன்னைக்கு சனிகிழமை ! இன்னைக்கு அவ காலேஜ் அரை நாளா இல்ல முழு நாளன்னும் தெரியல ! அதான் மதியம் ஒரு மணில இருந்து இப்படி கேட் முன்னாடி வெய்டிங் ! 

மணி நாலு ! இப்பதான் பொண்ணுங்க எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வெளிய வர்றாங்க. இப்படின்னு தெரிஞ்சிருந்தா மதியம் லஞ்ச் முடிச்சிட்டு பொறுமையா வந்திருக்கலாம். கடைசியா அவளும் வந்தா ! வழக்கம் போல தனியா தான் நடந்து வந்தா ! எனக்கு அவ கிட்ட புடிச்ச விஷயத்துல இதுவும் ஒன்னு. இந்த படத்துல வர்ற ஹீரோயின்ஸ் மாதிரி ஒரு மொக்க கேங் கூடவே சுத்தறது இல்ல. ஏன்னா தனியா பேசவே எனக்கு உதறும் ! இதுல்ல மொத்தமா வந்தா அவ்வளோதான் ! பயத்துல மயக்கமே போட்டுருவேன் ! தூரத்துல வரும் போதே என்ன பாத்துட்டா ! கண்ணுல ஒரு சர்ப்ரைஸ் ! அதெப்படி பொண்ணுங்க கண்ணு கூட பேசுது ! (குரல் 2 - "டேய் ! முடியலடா !") பக்கத்துல வந்ததும் " ஹாய் ! என்ன இந்த பக்கம் ?" ன்னு கேட்டா. நான் சிரிச்சிகிட்டே "இல்ல ! ஒரு வேலையா இந்த பக்கம் வந்தேன். அதான் ! " ன்னு வழிஞ்சேன்.

"ஓஹோ!"

"அப்புறம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேக்கணும்"

"என்னது?"

" இல்ல ! அன்னைக்கு ! நீ ! வந்து ! பஸ் வரலைன்னு ! என்கிட்டே கேட்டல ! ஏன் என் கிட்ட கேட்ட ?" 

காக்க காக்க சூர்யா மாதிரி லவ்வ சொல்லப் போய், பழைய கார்த்திக்கையும் கமலையும் மிக்ஸ் பண்ணி கேவலமா எனக்கே புரியாத மாதிரி கேட்டுட்டேன் ! ஆனா எப்படியோ அவளுக்கு மட்டும் புரிஞ்சிருச்சு ! சின்னதா டக்குனு ஒரு ஸ்மைல் தெரிஞ்சுது ! ஐயோ !  நெஞ்சுல கத்தியால குத்தி இருந்தா கூட இப்படி ஒரு வலி வந்திருக்காது ! சிரிச்சே கொன்னுட்டா ! (குரல் 1 - "கவிதை! கவிதை !")

"தெரியல ! கேக்கனும்னு தோனுச்சு ! அதான் கேட்டேன் !"

"இல்ல அன்னைக்கு பஸ் வந்திருச்சு. நீ கேட்டும் கூட்டிட்டு போக முடியல. கஷ்டமா இருந்துச்சு ! அதான் இன்னைக்கு ! உனக்கு எதுவும்  ப்ராப்ளம் இல்லேன்னா ! வேணாம்னாலும் ஒகே ! நான் புரிஞ்சிப்பேன் !" (குரல் 2 - " டேய் ! உளறி மானத்த வாங்காத !")

"ம்"

இந்த வௌவால் எல்லாம் காதுக்கே கேக்காத சோனார் அலைவரிசைல தான் பேசுமாம் ! அப்படிதான் இந்த 'ம்' மும் ! ஆனா இது மட்டும் எப்படி எனக்கு கேட்டுச்சுன்னு தெரியல ! மத்தியானம் சாப்டாம பசில கண்ணு காது எல்லாம் அடச்சிருந்தாலும் இந்த 'ம்' மட்டும் தெளிவா கேட்டுச்சு !


(குரல் 1 - "ஒரு ஆயிரம் பட்டாம்பூச்சி ஒன்னா பறந்தா  எப்படி இருக்கும் ?!"

குரல் 2 - "ச்சு ச்சு ச்சு !")

அப்படியே உலகத்த ஜெயிச்ச மாதிரி ஒரு பீலிங் ! அவ பைக்ல உக்காந்ததும் காத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு!

(குரல் 1 - 'கண்கள் இரண்டால் ! உன் கண்கள் இரண்டால் !'

குரல் 2 - "லூசு ! அது அவ நடந்து வரும் போதுடா ! இப்ப 'பார்த்த முதல் நாளே' !" 

குரல் 1 - "ஒ ! சாரி !")

 வண்டி ஓட்ட ஆரம்பிச்ச உடனேயே இன்னும் இத எப்படி கொண்டு போலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன் ! பாதி வழில ஒரு பேக்கரி இருக்கு ! அங்க வண்டிய நிறுத்தி கொஞ்சம் சாப்டுகிட்டே பேசுனா என்ன ? கரெக்ட் ! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா !!

(குரல் 2 - "புது ஸ்டைல சொல்லுடா !"

குரல் 1 - "கண்ணா ! ரெண்டு லட்டு திங்க ஆசையா ?")

"இப் யூ டோன்ட் மைன்ட், பேக்கரில ஏதாவது சாப்டுட்டு போலாமா ?"

"ம்"

மறுபடியும் அதே சோனார் அலைவரிசைல "ம்" ! இந்த முறை ஹெல்மெட் போட்டு பின்னாடி அடிக்கற ஹார்ன் சத்தமே கேக்காம இருந்தாலும் "ம்" மட்டும் தெளிவா கேட்டுச்சு ! டக்குனு பிரேக் போட்டு பைக்க ரோட்டு ஓரத்துக்கு கொண்டு வந்தேன். பின்னாடி வந்த டவுன் பஸ் சட்டன் பிரேக் போட்டான். கண்டபடி கெட்ட வார்த்தைல திட்டுவான்னு நெனச்சா எதுவும் சொல்லாம போய்ட்டான் !

(குரல் 1 - " உன் நேரம் அப்படி டா ! யூ கேரி ஆன் !"  )

அந்த பேக்கரி கொஞ்சம் சின்னதுதான். ஒரு பத்து பதினஞ்சு டேபிள். சேர் இல்ல. எனக்கு இதுதான் கரெக்ட்னு தோனுச்சு ! அப்பதான் பக்கத்துல நிக்க முடியும் !  

ரெண்டு டீ, ஒரு ஸ்வீட் அண்ட் சால்ட் பிஸ்கட் பாக்கட்; பசில பாதி பாக்கெட்ட நானே காலி பண்ணிட்டேன் ! நான் சாப்புடுற ஸ்பீட பாத்து டக்குனு சிரிச்சிட்டா ! ஒரு செகண்ட் ஷாக் ஆயிட்டேன் ! அப்புறம் எனக்கும் சிரிப்பு வந்திருச்சு ! "சாரி ! பசி !" ன்னு சொன்னேன். அவ சிரிச்சிகிட்டே இருந்தா. அத பாத்தே மிச்ச பசி போயிருச்சு !

(குரல் 1 - "கொன்னுட்ட !")

அதுக்குள்ள  டிஸ்டர்ப் பண்ற மாதிரி எவனோ வெளிய இருந்து டீ ஆர்டர் பண்ணிட்டு ஹார்ன அடிச்சு இம்ச பண்ணிட்டு இருந்தான். அத கண்டுக்காம, லைட்டா "புடிச்சிருக்கா ?"ன்னு கேட்டேன்.

"என்னது ?"

" ம் ? இந்த பேக்கரி ! வாங்கி ரெண்டு பெரும் சேந்து டீ ஆத்தலாம் !"

மறுபடியும் க்ளுக்குனு ஒரு சிரிப்பு !

அதுக்குள்ளே ஹார்ன் சத்தம் இன்னும் அதிகம் ஆயி கடுப்பாயிட்டேன். திரும்பி எதாவது சொல்லலாம்னு நெனைக்கரதுகுள்ள " ஏம்ப்பா ! முதல்ல அவங்களுக்கு கொடுத்து அனுப்பு ! தல வலிக்குது !" ன்னு குரல் ! திரும்பி பாத்தா

"ஐயோ ! அம்மா !"

அப்படியே அதிர்ச்சில பெட்ல இருந்து கீழ விழுந்துட்டேன் ! மணிய பாத்தா சாயங்காலம் நாலரை !

பின்குறிப்பு :

அதிகாலை கனவு பலிக்கும்னு சொல்லுவாங்க ! இந்த சாயங்கால கனவு ! அப்ப பலிக்கவே பலிக்காதா ?!! 

6 comments

Leave a Reply