Venghai -

Oct
2011
10

posted by Tamilnambi on ,

No comments



படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி பெருசா எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இந்த படத்துமேல இல்ல. அதாலதான் படம் ரிலீஸ் ஆகி நாலு நாள் ஆனாலும் கண்டுக்காம இருந்துட்டேன்.(தியேட்டருக்கு போய் படம் பாக்கணுமான்னு நெனச்ச என்னோட சோம்பேறித்தனமும் இதுக்கு ஒரு காரணம்னாலும் அதப்பத்தி இங்க பேசப்படாது. ) கடைசியா வீட்டுல வெட்டியா இருக்கறது தாங்க முடியாம 80 ரூபாய் டிக்கெட்ட 105 ரூபாய்க்கு வாங்கி பாத்துரலாம்னு முடிவு பண்ணுனேன்.( அய்யயோ.. ப்ளாக் டிக்கெட் இல்லைங்க.. இது ஆன்லைன் டிக்கெட் !)

சரின்னு மத்தியானம் பெய்ஞ்ச மழையையும் பொருட்படுத்தாம அதால விவசாயம் பண்ண நல்லா உழுது போட்ட மாதிரி இருக்கற ரோட்டையும் சமாளிச்சு ஒருவழியா தியேட்டருக்கு போய் சேந்துட்டேன்.( 105 ரூபா டிக்கெட் ஆச்சே !) படம் ஆரம்பிச்சதுல இருந்து மனுசுக்குள்ள ஒரே ஒரு உறுத்தல். இந்த இங்கிலீஷ்ல Déjà vu ன்னு சொல்லுவாங்க தெரியுமா ? அதாங்க.. எதை பாத்தாலும் இதை எங்கயோ ஏற்கனவே பாத்த மாதிரி இருக்கேன்னு சில சமயம் தோணுமே, அதேதான். இதுதான் எனக்கு படம் முழுக்க தோனுச்சு.

நான் பத்தாங் கிளாஸ் படிக்கறப்போ எப்படி கணக்கு வாத்தியார் முக்கியம்னு சொன்ன கணக்க அப்படியே மனப்பாடம் பண்ணி, அப்படியே முழு பரிட்சையிலே அதை ஸ்டெப் மாறாம போட்டு நூத்துக்கு நூறு வாங்குனேனோ ( ஹி ஹி.. தற்பெருமையெல்லாம் இல்லைங்க.. சும்மா ஒரு உதாரணத்துக்கு சொல்றேன்), அதே மாதிரி தனக்கு தெரிஞ்ச ஒரே ஒரு சினிமா பார்முலாவ இன்னொரு தாட்டி ஹரி பெர்பெக்டா போட்டிருக்கார். முதல்ல இருந்து கடைசீ வரைக்கும் ஒரு ஸ்டெப் மாறல. நான் கண்டிப்பா சொல்றேன், ஹரி டைரக்டர் ஆகலேன்னா கண்டிப்பா கணக்கு வாத்தியார்தான் ஆயிருப்பார்.

அதே சமயம், இந்த படத்த பாக்கறப்போ இன்னொரு விசயமும் தெரியுது. ஹரிக்கு கொஞ்சம் கொஞ்சமா கற்பனை சக்தியோ இல்ல ஞாபக சக்தியோ குறைஞ்சிட்டே வருது. ஏன்னா, அவர் ஏற்கனவே எடுத்த எல்லா படத்துல இருந்தும் கொஞ்சம் கொஞ்சமா எடுத்து, இந்த படத்தோட கதைய உருவாக்கிட்டாரு. பாவம் அவரும் என்னதான் பண்ணுவாரு ! இப்ப அரிவாள் முன்னேற்ற சங்கத்துல இவர் மட்டும்தான் இருக்காரு. அதான் இவர் படத்துலயிருந்து இவரே காபி அடிக்க வேண்டிய நெலமை. சரி, அப்படி என்னதான் கதைன்னு கேக்கறிங்களா ?




'கோவில்' ராஜ்கிரண் அப்பாவுக்கு 'வேல்' சூர்யா ஸ்டைல்ல மகன் தனுஷ். அதே எரியால பிரகாஷ் ராஜ் எம்.எல்.ஏ. முதல்ல அடிதடின்னு ஜாலியா இருக்கற தனுஷ் அப்பா பேச்சை கேட்டு அமைதியா இருக்க திருச்சி வர்றாரு. ஆனா 'தமிழ்' பிரசாந்த் மாதிரி இருக்க நெனைக்கற தனுஷ வில்லனுங்க இண்டர்வெல்ல 'தாமிரபரணி' விஷாலா மாதிரறாங்க. முதல் பாதியில தனுஷ கொல பண்ண ட்ரை பண்ணுன பிரகாஷ் ராஜ் ரெண்டாவது பாதியில அப்பா ராஜ்கிரன்ன கொல பண்ண ட்ரை பண்றாரு. இதனால தனுஷும் 'ஐயா' சரத் குமாரா மாறி அவர் அப்பாவ காப்பாத்திட்டே வர்றாரு. இதுக்கு நடுவுல முதல் பாதியில அறிமுகமாகர தமன்னாவால ( இந்த கேரக்டர் கூட ஏதோ தமிழ் படத்துல வந்துதான். நாந்தான் மறந்துட்டேன்) ரெண்டாவது பாதியில ஒரு சின்ன ட்விஸ்ட்டு.( இந்த ட்விஸ்டால கதை 10 டிகிரி கூட திரும்பல). எனிவேஸ் கடைசில எப்படி இந்த 'ஐயா' சரத் குமார் 'சிங்கம்' சூர்யாவா மாறி பிரகாஷ் ராஜ கொல்றாருங்கறதுதான் மீதி கதை ! (எழுதுற என்னாலையே முடியலையே, இதை படிக்கற உங்கள நெனைச்சா எனக்கு இன்னும் பாவமா இருக்கு !)

இதுக்கு நடுவுல நீங்க எதிர்பாக்குற ஹீரோ இன்ட்ரொடக்ஸன் சாங், சிவகங்கைல இருக்கற ஹீரோ ஹீரோயின் சிங்கப்பூர் போய் பாடற சாங், ஒரு சோக சாங், ஒரு மெலடி சாங், கடைசில வர்ற ஒரு குத்து சாங், நடுவுல அப்பப்ப வர்ற தீம் சாங், அப்புறம் இதுக்கும் நடுவுல அங்கங்க கொழம்புல பிச்சுப்போட்ட கொத்தமல்லி மாதிரி கஞ்சா கறுப்போட அலறல் காமெடி எல்லாமே இருக்கு.மேலும் இதுல நீங்க விசில் அடிக்கனும்னே எழுதுன பஞ்ச் டையலாக்ஸும் உண்டு. எக்ஸாம்பிள் :
பருப்புல உசந்தது முந்திரி; பதவில உசந்தது மந்திரி
எப்புடி ஹரி உங்களால மட்டும் இதெல்லாம் முடியுது ! பேரரசும் டி.ஆர்ரும் இல்லாத கொறைய நீங்கதான் நெறைக்கிரிங்க.

இது எல்லாத்தையும் சேத்து சுருக்கமா எனக்கு பக்கத்துல உக்காந்து படம் பாத்தவர் மாதிரி சொல்லனும்னா " படம் சப்பையா இருக்கு !!" ( அப்புறம் நான் மட்டும் ஏன் இவ்வளோ பெருசா எழுதி இருக்கேன்னு நீங்க கேக்கலாம்.. என்னங்க பண்றது.. நாலு வருசமா இன்ஜினியரிங் படிச்சு இப்படி ஆயிட்டேன் ! )

பின் குறிப்பு :
இதெல்லாத்தையும் படிச்ச பின்னாடியும் நீங்க உயிரோட இருந்தா கம்மென்ட்ஸ்ல இந்த போஸ்ட பத்தி என்ன நெனைக்கிரிங்கனு எழுதுங்க. :)

Leave a Reply